Pages

Saturday 21 August 2010

உயர்தரப் பரீட்சை எழுதாத மேர்வின் கலாநிதியாவார் : பௌத்த தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியெய்தவில்லை. எனினும் அவர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார் என பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேர்வின் சில்வாவை மீண்டும் பிரதியமைச்சராக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கோரி, நேற்று பௌத்த பிக்குகளின் சம்மேளனம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன் போது உரையாற்றிய பௌத்த பிக்குவான தேவாலகம தம்மசேன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேர்வின் சில்வா,கலாநிதி என்றாலும் அவர் துட்டகைமுனுவைப் போன்றவர் என தேரர் தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது அதனை விட்டுவிட்டு விண்வெளிக்கு சென்ற முதல் ரஷ்யர் யூரி ககாரின் வந்த ஹெலிகொப்டரை பார்க்கச் சென்றுவிட்டார்.

அதன் காரணமாக பரீட்சையை எழுதாமல் சிறப்பான சித்தியை பெறத்தவறி விட்டார் என்றும் தேரர் மேலும் குறிப்பிட்டார். (lamkasiri)

Home          Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment