Pages

Thursday 30 September 2010

Sri Lankan President at the UN denies war crimes





Sri Lankan President Mahinda Rajapakse’s trip to New York and speech at the UN General Assembly last week had two main purposes: to cover up for war crimes committed during the country’s civil war and to appeal for foreign investment to rebuild its devastated economy.

Rajapakse’s speech at the UN was his first since the defeat of the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) in May last year. Facing widespread international criticism and calls for a war crimes investigation, last year he sent then Prime Minister Ratnasiri Wickremanayake to the annual General Assembly meeting.
 Addressing the UN, Rajapakse repeated the lie that his government and the Sri Lankan military committed no war crimes. Despite the government’s claims that the army killed no civilians, the UN and various human rights organisations have provided ample evidence that thousands, if not tens of thousands, of Tamil civilians died as a result of the military’s artillery and aerial bombardment.

Following the LTTE’s defeat, the army herded more than a quarter of a million civilians—men, women and children—into detention centres where they were held for months before resettlement began. Around 40,000 people are still being detained in these so-called welfare villages. Those who have been “resettled” have been returned to their villages and towns with scant financial assistance under what amounts to a permanent military occupation.

Rajapakse denounced the LTTE as “one of the most brutal, highly-organised, well-funded and effective terrorist organisations” in the world. Appealing for support from the US and European countries, he declared: “[M]any of the atrocities, the West has come to experience in recent times, the people of Sri Lanka were themselves the victims of, for nearly 30 years…”

Just as the US and its allies have waged their neo-colonial wars under the bogus banner of fighting terrorism, so Rajapakse justified his communal war as a “war on terror”. The LTTE, a bourgeois nationalist organisation advocating Tamil separatism, emerged as a result of decades of anti-Tamil discrimination by Colombo governments. Its individual acts of terrorism against Sinhala civilians were certainly reactionary and provided grist for the mill of Sinhala supremacist propagandists. But they were also a desperate response to the broader state repression directed against the island’s Tamil minority.

In the lead up to the LTTE’s defeat, the US and European powers, which had backed Rajapakse’s war, began to raise concerns over human rights abuses and calls for a limited investigation into possible war crimes—by both sides. As commentators in Colombo were quick to point out, Washington was proposing to hold the Sri Lankan military to account for crimes similar to those carried out by US forces in Afghanistan on a routine basis. The real purpose behind the US call was to put pressure on the Rajapakse government, which in the course of the war had come to depend on China for economic, military and political aid.During his speech, Rajapakse repeated a proposal made previously to change international law to take into account so-called wars against terrorism. “[I]t is worth examining the capacity of current international humanitarian law to meet contemporary needs… The asymmetrical nature of conflicts initiated by non-state actors gives rise to serious problems which need to be considered in earnest by the international community,” he said.

The proposal is a rather obvious appeal to the US and its allies to join Sri Lanka in pushing for a change to international law to authorise all governments—“big or small”—to use methods that are currently illegal under the Geneva Conventions. Like the US military in Iraq and Afghanistan, its Sri Lankan counterparts resorted to detention without trial, torture and extra-judicial killings to terrorise the Tamil population and government opponents.

Rajapakse’s mission to the UN appears to have fallen flat. He had planned to meet various government leaders, including from Australia, UK, Brazil, France, South Korea and Russia, to solicit political and economic support. However, Rajapakse was only able to meet leaders from Turkey, Qatar, Jamaica, Iran and Norway.

Rajapakse’s meeting with UN Secretary General Ban Ki-moon was regarded in Colombo as a key event. With the backing of the US and European powers, Ban has appointed an expert panel to advise him on human rights violations in the final months of the Sri Lankan war. During his meeting with Rajapakse, Ban restated that the panel was not a formal war crimes investigation—a comment that was immediately seized on in Colombo as a diplomatic triumph.

Rajapakse had also been hoping to reverse the European Union’s decision to suspend its GSP+ tariff concessions for Sri Lanka unless various human rights criteria were met. On his way to New York, Rajapakse stopped in Berlin to meet German Chancellor Angela Merkel but had no success in altering the EU decision. The loss of EU trade preferences will hit the battered Sri Lankan economy hard because Europe is the top export market for the country’s sizable garment industry.

Rajapakse’s claims to be “building a lasting peace, healing wounds, ensuring economic prosperity and guaranteeing the rights of the whole nation to live in harmony” are completely fraudulent. Continuing, widespread anti-Tamil discrimination will fuel communal tensions and conflict. As for “economic prosperity,” the country is heavily in debt as a result of the war and global financial crisis. The government is under pressure to impose drastic austerity measures to reduce the budget deficit.

The second aspect of Rajapakse’s trip to New York was to secure investment and aid. His entourage of 130 people included ministers, parliamentarians and around two dozen business leaders. The Sri Lankan embassy organised for the president to meet American business executives at the Helmsley Hotel. Around 150 attended, according to an embassy release, “from a variety of industries, including the hospitality and tourism industry, the beverage industry, and the aerospace and defence community”.

In an interview with the Wall Street Journal, Rajapakse boasted: “Sri Lanka—with a literate population, relatively low labour costs, and a sizeable corps of trained accountants—is drawing the interest of outsourcing firms, including major Indian business-process outsourcing companies seeking ways to expand outside India, where wages also have been rising.”

In the same article, Ashroff Omar, chief executive of the multi-national apparel exporter Brandix Lanka, underlined the significance of Sri Lanka as a cheap labour platform. He explained that it currently costs about $US150 a month to employ a “trained” Sri Lankan garment worker, compared with $400 in China. He added that in couple of years China’s labour cost would be about $600 a month while the costs in Sri Lanka would be around $200.

It appears that Rajapakse was no more successful in attracting investment offers than he was in mending relations with the US and the European powers. As the economic crisis worsens, the Sri Lankan government will inevitably attempt to shift new burdens onto working people as it seeks to lower costs and make the country “more competitive” with other cheap labour platforms. (WSWS)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

Monday 27 September 2010

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 03

நஸ்க் பற்றிய புதிய சிந்தனை

அல்குர்ஆன் மறுமைவரைக்கும் வழிகாட்டும் ஒரு நூல் என்பது முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அது கால, இட, வர்த்தமானங்களுக்கு ஏற்ப தனது வழிகாட்டலை வழங்கிச் செல்லும். அது மனித சமூகத்தை முழுமையாக நோக்கியே பேசுகின்றது. மனித சமூகத்திற்கு வழிகாட்டவும் மனித சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லவுமே அது இறக்கப்பட்டது. பிரச்சினை எக்காலத்தை, எவ்விடத்தைச் சேர்ந்ததாயினும் அதற்குத் தீர்வு சொல்லும் அல்குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்ட காரணங்களிலிருப்பது, அவற்றை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கவே. “படிப்பினை’ என்பது சட்டவசனத்தின் பொதுவான கருத்தைக் கொண்டே அமையும். அது இறக்கப்பட்ட காரணத்தை வைத்தல்ல என்ற உஸுலுல் பிக்ஹ் விதி இங்கு கருத்திற் கொள்ளப்படல் அவசியமாகும்.

அல்குர்ஆன் நிரந்தரமானது என்பதன் பொருள் அது தீர்வு காணவந்த மனித சமூகத்தின் பிரச்சினைகளும் சிக்கல்களும் நிரந்தரமானவை என்பதேயாகும். எனவே அல்குர்ஆன் நிரந்தமானது என்பதை ஏற்றுக் கொண்டால் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளும் நிரந்தரமானவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இந்தப் பின்னணியிலேயே நாசிக் / மன்ஸூக் பற்றிய ஒரு புதிய சிந்தனை முன்வைக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த சட்டமொன்றை பின்னால் வரும் சட்டமொன்று செல்லுபடியற்றதாக்கும் என்பதே “நஸ்க்’ பற்றிய பழைய சிந்தனையாகும். ஆனால் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டம் செல்லுபடியற்றதாக்கும் என்பதைவிட, முன்னைய சட்டம் இறக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த அதே சூழல் மீண்டும் வருமாயின் அச்சட்டத்தை அச்சூழலில் பிரயோகிக்க முடியும் எனக் கூறுவதே புதிய சிந்தனையாகும். இக்கருத்தை இமாம்களான அல் பிகாயி, ரஷித் ரிழா, ஹிழ்ர் பெக், முஹம்மத் அல் கஸ்ஸாலி ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஷமா நன்ஸக் மின் ஆயத்தின் அவ்நுன்ஸிஹா’ என்ற வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த இமாம் ரஷித் ரிழா அவர்கள் இக்கருத்தையே தெளிவாக முன்வைத்துள்ளார்.

இஸ்லாம் அதன் வரலாற்றில் சட்டங்களை அமுல்படுத்தும் போது அதில் “படிமுறை – செயற்படுத்தல்’ என்ற ஒழுங்கைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு, வணக்க வழிபாடுகள், பிரசாரமென எல்லாத்துறைகளிலும் படிப்படியாகவே சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றது. இஸ்லாமிய இலட்சியவாத அரசொன்றை உருவாக்குவதற்கு முன்னர் சட்டத்தில் இப்படியொரு படிமுறைப் போக்கைப் பின்பற்றியே ஆகவேண்டும். சட்டத்தின் இறுதிக்கட்டத்திற்கு வரமுன் அதற்குத் தயார்படுத்தி எடுக்க ஒவ்வொரு கட்டத்திற்குமான சட்டங்கள் அவசியமாகும். எனவே, முஸ்லிம் சிறுபான்மையும் இந்தக் கருத்தில் நோக்கப்படலாம். அவர்கள் “தாருல் குப்ரில்’ வாழும் போது அவர்கள் மத்தியில் இஸ்லாத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதற்கு இச்சிந்தனை தேவைப்படலாம்.

சிறுபான்மைக்கான பிக்ஹ் சிலபார்வைகள்

இப்பகுதியில், மேலே நாம் தொட்டுக்காட்டிய இஸ்லாமிய சட்ட அடிப்படைகளில் இருந்து எவ்வாறு ஒரு முஸ்லிம் – சிறுபான்மை தனக்கான பிக்ஹை உருவாக்கலாம் என்பதற்கான சில அவதானங்களையே குறிப்பிட விரும்புகிறோம்.

1. குடியுரிமை

இஸ்லாமிய ஆட்சி இல்லாத பூமியில் முஸ்லிம் சிறுபான்மை வாழ முடியுமா என்பதை முன்னரும் நோக்கினோம். இங்கு அதற்கான சட்ட அனுமதி இருக்கிறதா என்பதையே தொட்டுச் செல்ல முயல்கின்றேன். அதாவது அந்நிய நாட்டில் ஒரு முஸ்லிம் பிரஜா உரிமை பெறுவதை அல்லது தங்கி வாழ்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? உண்மையில், சர்வதேச இஸ்லாமிய உம்மத்தோடு எந்தத் தொடர்புமின்றி வெறுமனே செல்வம் சேர்ப்பதற்காக மட்டும் ஒரு முஸ்லிம் அந்நிய நாட்டில் தங்கிவிட்டால் அவன் பெரும்பாவியாகிறான். இதைக் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் பெரிய ஹராம்களில் ஒன்றாகக் கணிக்கின்றார். ஆனால், இஸ்லாமிய வாழ்வு முறையைக் கொண்டுவரும் நோக்கோடு தங்குவதை அவர் அனுமதித்துள்ளார்.

அந்நிய நாட்டின் சட்டங்களைப் பின்பற்ற முடியுமா? அதில் எந்தப் பகுதியைப் பின்பற்றலாம் என்பதைப் பொறுத்தவரையில், தெளிவான சட்டவசனங்கள் இல்லாத பகுதியில் (இஜ்திஹாதுக்குட்பட்ட பகுதிகளில்) அந்நிய அரசின் சட்டங்களுக்குட்பட முடியும் என்பது கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் கருத்தாகும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படக் கூடிய விடயங்களிலெல்லாம் அந்நிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. அத்தோடு “நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம்.’’ என்ற வசனத்தில் இருந்து ஷவாக்குரிமை’ பற்றியும் முஸ்லிம் சிறுபான்மை சிந்திக்க முடியும். தனது சிறுபான்மை வாக்குரிமைப் பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியையோ சட்டத்தையோ மாற்றப் போராட முடியும். அது பிரிதொரு தனியான ஆய்வை வேண்டி நிற்கிறது.

2 வணக்க வழிபாடுகள்

தஹாரா (சுத்தம்) நஜாஸா (அசுத்தம்), வுழு தொடர்பான விடயங்களில் கஷ்டத்தை நீக்கி, சட்டங்களை இலகுபடுத்திக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நோய், பிரயாணம் போன்ற நியாயமான காரணங்களுக்காக இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளைப் பின்பற்றலாம்.

ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகைகளை சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர் தொழுவதற்கு ஹனபி சிந்தனைப் பிரிவு அனுமதித்துள்ளது. இதை எந்தளவுக்கு ஏற்கலாம் என்பது குறித்து ஆராய்வது அவசியமாகும்.

ஆகக் குறைந்தது “ஜும்ஆ’த் தொழுகைக்காவது பெண்கள் பள்ளிவாசலுக்கு சமூகமளிப்பதை அனுமதிக்கலாமா? தொழுகையை நடாத்தும் போது ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே திரையிடுவதற்குச் சட்டத்தில் ஆதாரம் உண்டா? இமாமின் குரலை மட்டும் பெண்கள் கேட்டால் போதுமா? அவரது அசைவுகளை அவதானிக்க வேண்டிய அவசியமில்லையா? என்றெல்லாம் ஆராய வேண்டிய தேவை வணக்கவழிபாடு தொடர்பான விடயங்களில் உள்ளது.

3 கொடுக்கல் வாங்கல்

நவீன பொருளாதாரங்கள் வட்டியினடிப்படையிலேயே இயங்குகின்றன. வட்டியோடு சுழலும் நிறுவனங்களில் சேர்ந்து இலாபமுழைப்பதைப் பொறுத்தவரையில் அவற்றைக் கர்ளாவி அவர்கள் இரண்டுவகையாகப் பிரிக்கின்றார். ஒன்று, தொழிலின் அடிப்படையில் ஹராமாகக் கருதப்படும் நிறுவனங்கள். உதாரணமாக, மது, சிகரட், புகையிலை உற்பத்தி நிறுவனங்களைக் குறிப்பிடலாம். மற்றது, ஹராமாக்கப்பட்ட வட்டியை உழைக்கும் நிறுவனங்கள். இதை இஸ்லாம் திட்டவட்டமாகத் தடைசெய்துள்ளது. தொழில் அடிப்படையில் ஹலாலாக இருக்க அதன் மற்றொரு பகுதி ஹராத்தோடு தொடர்புடைய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சில இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அவற்றை அனுமதிக்க, வேறுசிலர் தடைசெய்துள்ளனர்.

வங்கி இலாபமாகக் கிடைக்கும் வட்டியை சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் அழிவதை அல்லது வங்கியிலேயே அவற்றை விட்டுவைப்பதை கலாநிதி அவர்கள் ஆதரிக்கவில்லை. ‘ஸதகா’ என்ற கருத்தில் இல்லாமல் ‘நலன்’ (மஸ்லஹா) என்ற வகையில் ஏழைகளுக்கு அவற்றைச் செலவளிக்க முடியும் என்ற கருத்தை அவர் தெரிவிக்கின்றார்.

பொதுவான செல்வத்திலிருந்து யாரும் பயன்பெறமுடியும். ஆனால் வங்கியோடு தொடர்புகொண்ட குறிப்பிட்ட நபர் வங்கி இலாபத்தைப் பயன்படுத்துவதே ஹராமாகும். அச்சட்டம் மற்றவர்களுக்குப் பொருந்தாது. பள்ளிவாசல் கட்டுதல், குர்ஆனைப் பதிப்பித்தல் போன்றவற்றில் இச்செல்வத்தை செலவிடமுடியும். இத்தகைய பணியை மேற்கொள்பவர்களுக்கு பன்மடங்கு கூலிகிடைக்கும். குறிப்பிட்ட நபர் ஹராத்தைவிட்டுத் தவிர்ந்து கொள்வதோடு தனது தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்தவுமில்லை. இங்கே நன்மைக்கு ஓர் ஊடகமாக அவர் விளங்குகின்றார். செல்வத்தைக் கொண்டு முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றார். ஆனால் ஸதகா செய்த கூலி அவருக்குக் கிடைக்காது.(9)

இறுதியாக, இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எதுவும் முடிந்த முடிவுகள் அல்ல. முஸ்லிம் சிறுபான்மைக்கென்று ஒரு பிக்ஹை – வாழ்வொழுங்கை எவ்வாறு வகுக்கலாமென்பதற்குச் சில சமிக்ஞைகளே இவை. எனவே சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவிகள் இத்துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது பயன் மிக்கதாய் அமையும். (Idrees (Plus*))

Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 02

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

தாருல் இஸ்லாத்திற்கு வெளியே ஒரு முஸ்லிம் வாழ்வதை அனுமதிக்கும் நேரடி ஆதாரங்கள் எதுவும் அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ இல்லை. ஆனால் அவ்வாறு வாழ்ந்ததற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

யூசுப் (அலை) அவர்கள் அந்நிய அரசின் கீழ் ஓர் அமைச்சராக இருந்து அந்நாட்டு மக்களுக்கு ஏற்படவிருந்த பெரும் பஞ்சத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் காத்ததாக சூறா யூசுப் கூறுகின்றது. ஆனால் யூசுப் (அலை) அவர்கள் வாழ்ந்த சமூகம் ஜாஹிலிய்ய சமூகமாக இருந்தது. அந்நாட்டு யாப்பிலும் இஸ்லாம் இருக்கவில்லை. இறை சட்டமில்லாத பூமியில் பொதுவாகவே அநீதியும் அராஜகமும் பண்பாட்டு வீழ்ச்சியும் இருக்கும். குறிப்பாக அரண்மனைகள் ஒழுக்க வீழ்ச்சிக்குப் பெயர் போன இடமாக விளங்கிற்று. யூசுப் (அலை) அநியாயமாகத் தண்டிக்கப்பட்டார். ஆட்சியில் அமர்ந்த பின்பும் யூசுப் (அலை) யாப்பில் மாற்றம் கொண்டு வந்ததாகவும் இல்லை. ஓர் உபாயத்தைக் கையாண்டு தனது சகோதரனைத் தன்னோடு இருத்திக் கொள்கின்றார்கள். (அத்தியாயம் 12)

அஷ்ஹமா பின் அப்ஜர் அந்நஜ்ஜாஷி ஹபஸாவின் மன்னராக இருந்தார். அரபியில் இவரது பெயர் அதிய்யா. நஜ்ஜாஷி என்பது புனைப்பெயர். நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். ஆனால் ஹிஜ்ரத் செய்ய வில்லை. ஹபஷாவுக்கு சென்ற முஸ்லிம்களுக்குப் பேருதவி புரிந்தார். (ஆதாரம்: அல் இஸ்ஸாபா இப்னு ஹஜர் அல் அஸ்கலானி 1:109)

இவர் தொடர்பாகவும் ஸஹீஹுல் புகாரியில் நான்கு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவர் மரணித்த போது இறை தூதர் (ஸல்) ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மதீனா இஸ்லாமியப் பூமியாக மாறியதும் நஜ்ஜாஷி மன்னரிடமிருந்த முஹாஜிர்கள் விடைபெற்றுச்செல்லும் போது அவர் இறைத்தூதருக்கு எழுதிய கடிதம் நோக்கத்தக்கது.

“நஜ்ஜாஷி அஷ்ஹமா, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எழுதிக் கொள்வது இறைத்தூதரே, சமாதானமும் அருளும் உங்கள் மீது உண்டாவதாக! இறைத்தூதர் அவர்களே. மக்காவில் இருந்து எமது நாட்டுக்கு முஹாஜிர்களாக வந்த உங்கள் தோழர்களை நான் மீண்டும் உங்களிடம் அனுப்பிவிட்டேன். ஹபஷா வாசிகள் அறுபது பேரோடு எனது மகனையும் உங்களிடம் அனுப்பி வைக்கின்றேன். இறைத்தூதரே, அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களிடம் வந்துவிடுவேன். நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியம் என்று நான் சாட்சி கூறுகின்றேன். இறைத்தூதருக்கு சாந்தியும் இறையருளும் உண்டாவதாக.’’(5)

மனிதத் தேவைகள், நிர்ப்பந்தங்கள், நியாயமான காரணங்கள், விதிவிலக்கல்கள், சூழ்நிலைகள் என்பவற்றையும் கருத்திற் கொண்டே அல்லாஹ் சட்டங்களை இயற்றியுள்ளான். அவன் இயற்றிய சட்டங்களைப் பின்பற்றுவதில் மனிதன் சிரமங்களை எதிர்நோக்குவான் என்பதால் சூறா அல் பகறாவின் இறுதி வரிகள் இப்படிக் கூறுகின்றன: “இறைவா! எமக்கு முன்வந்தோருக்குப் பெரும் பொறுப்புக்களைச் சுமத்தியது போன்று எம்மீதும் அதிக பாரத்தைச் சுமத்திவிடாதே!’’ (2:286) என்று அடியார்கள் கேட்க அல்லாஹ் “ஆம்’’ என்று கூறினான். (ஆதாரம்: முஸ்லிம்)
அல்லாஹ் தனது தூதர் ஒருவரைப் பற்றி முன்னைய வேதம் ஒன்றில் பின்வருமாறு வர்ணிக்கின்றான். “அவர் மக்களுக்கு நன்மையை ஏவுகின்றார். தீமையைத் தடுக்கின்றார். தூய பொருட்களை ஹலாலாக்குகின்றார். தீய பொருட்களை ஹராமாக்குகின்றார். மேலும் அவர்களின் கஷ்டத்தை, அவர்களின் மீதிருந்த விலங்குகளை அவர் விடுவிக்கின்றார்.’’ (7:157)

நோன்பு பற்றிய வசனத்தின் இறுதியில் “அல்லாஹ் உங்களுக்கு இலேசையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை.’’ (2:185) என்று வருகிறது.

திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதோரைப் பற்றிய வசனங்களைத் தொடர்ந்து அல்குர்ஆன் “அல்லாஹ் உங்களுக்குக் கஷ்டத்தைக் குறைக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28) என்று கூறுகின்றது.

சுத்தம் பற்றிய ஆயத்தை அடுத்து “அல்லாஹ் உங்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.’’ (5:6) என்று கூறுகின்றான். இந்த சட்ட வசனங்களின் பின்னணியில் நின்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் சில சட்டவிதிகளை உருவாக்கியுள்ளதை நாம் அவதானிக்க முடியும். அவற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

கஷ்டம் இலகுவை வேண்டி நிற்கும்

“அல்கவாயிதுல் பிக்ஹிய்யா’ (இஸ்லாமிய சட்டவிதிகள்) பற்றி விளக்கும் எல்லா நூல்களும் ஒத்துக் கொண்ட மிகத்தெளிவான ஒர் அடிப்படை விதியாக இது அமைகிறது.

இந்த விதிக்கேற்ப இஸ்லாமியக் கடமைகளில் நோய், பிரயாணம், அறியாமை போன்ற நியாயமான காரணங்களுக்காக சலுகைகளும் இலகுபடுத்தல்களும் சட்டமாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். “அல்லாஹ் அவனுக்கு மாறுசெய்வதை வெறுப்பது போன்று அவன் அளித்துள்ள சலுகைகள் பின்பற்றப்படுவதை விரும்புகின்றான்.’’

சுத்தம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அத்தியாயங்களில் இத்தகைய சலுகைகளையும் இலகுபடுத்தல்களையும் நிறையக் காணலாம். இவை தேவைப்படும் இடங்களில் பிரயோகிக்கலாம் என்பதில் எந்தக் கருத்து முரண்பாடும் கிடையாது.

நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்

இஸ்லாமிய சட்டத்தில், மனிதனுக்கேற்படும் நிர்ப்பந்தங்கள் அழுத்தங்களின் போது தடை செய்யப்பட்ட விடயங்களில் விதிவிலக்களிக்கப்படுவதை இது குறிக்கும். இதுவே “நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்’ என்பது பிரபல்யமான சட்டவிதியாக மாறியது. இவ்விதியைப் பூரணப்படுத்தும் வகையில் “நிர்ப்பந்தத்தின் போது அனுமதிக்கப்பட்டவை அதன் அளவுக்கேற்பப் பிரயோகிக்கப்படும்’, “தேவை தனியானதோ பொதுவானதோ, (தேவை) நிர்ப்பந்தத்தின் தரத்தில் வைத்து நோக்கப்படும்’ என்பன போன்ற உபவிதிகள் உருவாக்கப்பட்டன.

தடுக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் குறிப்பிட்ட பின்பே அல்குர்ஆன் இந்தச் சட்டம் பசிபோன்ற நிர்ப்பந்த நிலைகளில் விதிவிலக்குப் பெறுவதாகக் கூறுகின்றது. இவ்வாறு அல்குர்ஆனில் நான்கு இடங்களில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இடங்கள் மக்கி சூறாக்கள் (அல்அன்ஆம், அந்நஹ்ல்) ஆகும். மற்றவை இரண்டும் மதனி சூறாக்கள் (அல்பகறா, அல்மாயிதா) ஆகும்.

இதில் பாவத்தை விரும்பாமலும் மனோ இச்சைக்கு அடிமைப்படாமலும் பிறர் மீது அத்துமீறாமலும் தேவைக்கேற்ற அளவை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகும். “கைர முத்தஹாலிபின் லி இத்மின்’’, “ஹைர பாகின் வலா ஆதின்’’ என்ற சட்ட வசனங்களில் இருந்து இக்கருத்து பெறப்பட்டுள்ளது.(6)

தனிமனிதனுக்கு நிர்ப்பந்தம் வருவது போன்று ஒரு சமூகத்துக்கும் நிர்ப்பந்தங்கள் வரமுடியும். இஸ்லாமிய சமூகம் போராட வேண்டிய அவசியம் ஏற்படும் போது சாதாரண நிலையில் அனுமதிக்கப்படாதவை தளர்த்தப்படுவதை ஒருவர் அவதானிக்கலாம். பனு நுழைர் என்ற யூதக் கோத்திரம் ஒப்பந்தத்தை மீறியபோது அவர்களுக்கெதிராகப் போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது அவர்களைச் சரணடையச் செய்வதற்கு அவர்களுக்கு அரணாக இருந்த மரங்கள் பல வெட்டப்பட்டன. இதை சூறா அல்ஹஜ்ஜின் ஆரம்பப் பகுதியில் அல்லாஹ் விளக்கியுள்ளான்.(7)

இந்தப் பின்னணியில் நின்று பார்க்கும் போது, முஸ்லிம் சிறுபான்மை பெரும்பான்மையினது ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலே வாழவேண்டி ஏற்படுகின்றது. பெரும்பான்மையின் ஆயுதப் படையெடுப்பை விட அதன் கலாசாரப் படையெடுப்பே சிறுபான்மையின் அடையாளத்தை அழிக்கும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். இந்நிலையில் அது தனக்கென ஒரு பிக்ஹை உருவாக்கிக் கொள்வது இவ்வபாயத்தை எதிர் கொள்வதற்குச் சிறந்த கவசமாகும்.

கால, இட, வர்த்தமானங்களுக்கேற்ப சட்டத்தீர்ப்புக்கள் மாற்றமுறல்

இறை சட்டவசனங்கள் ஒவ்வொன்றையும் தனியாகப் படித்துப் பார்க்கும் போது அவை மனிதனுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுக்கவும் அவனுக்கேற்படும் அநீதிகளை நீக்குவதற்குமே அருளப்பட்டுள்ளன என்பதை உணரமுடியும். சட்டவசனங்களை விளக்கும் போது அவற்றை அமுல்படுத்தும் முறையையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும். கால, இட, வர்த்தமானங்கள் மாறினால் ஒரு சட்ட அறிஞன் ஒரே நிலைப்பாட்டில் எப்போதும் நின்று விடக் கூடாது. கிளையம்சங்களில் தீர்ப்புச் சொல்லும் போது இஸ்லாமிய ஷரிஆவின் பொதுவான நோக்கங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இது பற்றி இமாம் இப்னுல் கையும் அவர்கள் தனது புகழ்பெற்ற நூலான “இஹ்லாமுல் முவக்கியீனில்’ பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “காலம், இடம், சூழ்நிலை, பழக்கவழக்கம், நோக்கங்கள் மாறுவதற்கேற்ப பத்வாவும் மாற்றமடையும்…’’

இது மிகவும் பயனுள்ள ஒரு சட்டப் பகுதியாகும். அறியாமை காரணமாக இஸ்லாமிய ஷரிஆவில் பாரிய குளறுபடிகள் நடந்துள்ளன… இஸ்லாமிய ‘ஷரிஆவின் அடிப்படை இம்மையிலும் மறுமையிலும் மனிதர்களுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அல்லாஹ்வின் சட்டம் முழுவதும் நீதியானது. அருள் நிறைந்தது. நலன்களைக் கொண்டுவருவது. அவை அனைத்துக்கும் ஆழ்ந்த நோக்கமுண்டு.

நீதியாகவோ அருளாகவோ அமையாத, நலனைக் கொண்டுவராத, ஆழ்ந்த நோக்கம் எதுவுமில்லாத ஒவ்வொரு சட்டமும் ஷரிஆவின் பாற்பட்டதல்ல. அதற்கு விளக்கங்கள் கொடுத்து நியாயப்படுத்தினாலும் சரியே…(8)

எனவே தவிர்க்க முடியாத சூழலில், தாருல் இஸ்லாத்தில் வாழவேண்டிய முஸ்லிம்கள் தாருல் ஹர்பில் வாழவேண்டி ஏற்பட்டால் சட்டங்களிலும் மாற்றம் ஏற்படுவதனை இஸ்லாம் அனுமதிக்குமா?  (Idrees (Plus*))  (தொடரும்.....)

Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)
Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி - 01

“அந்நியப் பெரும்பான்மைக்கு மத்தியில் வாழும் மனிதக் குழுமத்தையே நாம் சிறுபான்மை என்கிறோம். தற்போது உலகில் முஸ்லிம் சிறுபான்மையினரின் எண்ணிக்கை ஆயிரம் மில்லியனையும் தாண்டிவிட்டது. வருடாந்த சனத்தொகை 25 மில்லியனாக அதிகரித்துச் செல்கின்றது. சனத்தொகை அதிகரிப்பை விடவும் அவர்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, கல்வி, சமூகப் பிரச்சினைகள் பன்மடங்காக அதிகரித்துச் செல்கின்றன. பெரும்பான்மைக்கு மத்தியில் தமது அடையாளத்தை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்வதே அவர்கள் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவாலாகும். இது முஸ்லிம் சிறுபான்மை பற்றி, ஒரு வரன்முறையாக ஆற அமரச் செய்யப்பட்ட ஆய்வு முயற்சியல்ல. ஆய்வுக்கான ஒரு முன்முயற்சி மாத்திரமே எனலாம்.’

முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் என்பவன் ஒரு இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மதமுமல்ல. அது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். இஸ்லாம் மனிதர்களை கொள்கையின் அடிப்படையிலேயே பிரிக்கின்றது. இனம், மொழி, நாடு எனப் பிரித்துப் பார்ப்பதில்லை.

“சமூகமின்றி இஸ்லாம் இல்லை. தலைமைத்துவம் இன்றி சமூகமில்லை. பைஅத் (சத்தியப் பிரமாணம்) இன்றி தலைமைத்துவம் இல்லை.’’ என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்று இஸ்லாம் பற்றிய இரத்தினச் சுருக்கமான வரைவிலக்கணமாகும்.

“சமூகமின்றி மனிதன் இல்லை. சட்டமின்றி சமூகமில்லை.’’ என்ற இமாம் இப்னு கல்தூனின் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.

இதன் கருத்து இஸ்லாம் என்பது சமூகப் பரிமாணம் கொண்டதாகவே இருக்க முடியும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் தனிமனிதர்கள் சிலரோ அல்லது ஒரு குழுவோ நடைமுறைப்படுத்திவிட்டுச் செல்வதல்ல.

“யார் சமூகக் கட்டுக்கோப்பை விட்டும் ஒரு சாண் பிரிந்து செல்கின்றாரோ அவர் இஸ்லாம் எனும் வளையத்தைத் தனது கழுத்தை விட்டும் கழற்றியவராவார்.’’ (ஆதாரம்: அபூதாவுத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அவர் தொழுது நோன்பு நோற்று ஹஜ் செய்தாலுமா? என்று சஹாபாக்கள் கேட்க அவர் தொழுது நோன்பு நோற்று ஹஜ் செய்து தன்னை ஒரு முஸ்லிமென்று நம்பி இருந்த போதிலும் சரியே.’’ என்றார்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்கள். ( ஆதாரம் : அஹ்மத் )

அதாவது சில மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிச் செல்வது இஸ்லாமல்ல. இஸ்லாம் கூறும் சமூக அமைப்பை உருவாக்கிக் காட்டுவதே “இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல்’ என்பதன் சரியான அர்த்தமாகும்.

ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அது தனக்கெனத் தனியான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளது. பிரபஞ்சம், மனிதன் வாழ்வு, கடவுள் பற்றி இஸ்லாத்திற்கு தனியான கொள்கைகள் இருக்கின்றன. இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடு அதனை மிக அழகாக விளக்குகின்றது. அவ்வாறே சமூக வாழ்வு பற்றிய இஸ்லாத்தின் சிந்தனை தனித்துவமானது. தனிமனிதன், குடும்பம், அரசு என சமூக வாழ்வின் ஒவ்வொரு அலகுக்குமான உரிய வழிகாட்டல்களை மிக அழகாக விளக்குகின்றது.

உளவியல் பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்கள் மிகத் தெளிவானது. மனித உள்ளம், அதன் உணர்வுகள், அதன் வளர்ச்சி, அதன் அழிவு, அதை அழிக்கும் காரணிகள் பற்றி இஸ்லாத்தின் “தஸவ்வுப்’ பகுதி விளக்குகின்றது. இஸ்லாத்திற்கென்று ஒரு பொருளியல் திட்டம் இருக்கின்றது. அதன் செல்வப் பங்கீடு வலது, இடதுசாரி சிந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்குர்ஆனின் வரலாற்றுத் தத்துவம் சமூகங்களின் வரலாறுகளையும் அதனை ஆளும் சமூக விதிகளையும் அதன் எழுச்சி வீழ்ச்சிகளையும் அழகாக விளக்குகின்றது.

எனவே ஒரு முஸ்லிம், மதம் வேறு சமூகம் வேறு, மதம் வேறு அரசு வேறு, மதம் வேறு பொருளாதாரம் வேறு என்ற மதச் சார்பற்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ள முடியாது. இம்மை மறுமை என்றோ, உடல் ஆன்மா என்றோ அவனால் வாழ்வைக் கூறுபோட்டு நோக்க முடியாது. ஒரு முஸ்லிமின் வாழ்வு முழுமையான ஒரு கோட்பாட்டைக் கொண்டிருப்பதால் “எம்மதமும் சம்மதம்’ என்ற அழைப்புக்கும் அவனிடம் அங்கீகாரமில்லை. அதே நேரம் வணக்க வழிபாடுகளில் மட்டும் மூழ்கிக் கொண்டே பிற சமூகத்தின் சமூக வாழ்வோடு இணைந்து உருத்தெரியாமல் சிதைந்து போகவும் முடியாது.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய அறிஞர்கள் உலகை இரண்டுவகையாகப் பிரிக்கின்றார்கள்.

1 தாருல் இஸ்லாம்


2 தாருல் குப்ர்

இப்பிரிப்பு அங்கு வாழும் மக்களின் நம்பிக்கைக் கோட்பாட்டை வைத்தல்ல. அப்பூமியை ஆளும் சட்டத்தை வைத்தே இவ்வாறு பிரிக்கப்படுகின்றது. இறை சட்டத்தால் ஆளப்படும் பூமி தாருல் இஸ்லாம் எனப்படும். அங்கு வாழும் மக்களின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரியே. இறை சட்டத்திற்குப் புறம்பான சட்டங்களால் ஆளப்படும் பூமி தாருல் குப்ர் எனப்படும். அங்கு வாழ்வோரின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரியே!

முஸ்லிம்கள் எகிப்தை வெற்றி கொண்டதும் அது தாருல் இஸ்லாமாக மாறியது. ஆனால் அங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எகிப்தின் நிலை அவ்வாறே இருந்தது. முஸ்லிம்கள் இந்தியாவைக் கைப்பற்றிய போது அதன் பெரும்பான்மை சமூகம் தத்தமது மதங்களையே பின்பற்றினர். ஆனால் இஸ்லாமிய சட்டங்களால் ஆளப்பட்டதால் அது தாருல் இஸ்லாம் என்று அழைக்கப்பட்டது.

ஷாம் தேசத்தில் 200 ஆண்டுகளாக சிலுவை வீரர்களால் ஆளப்பட்ட சிற்றரசுகள் பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டிருந்தும் அவை தாருல் குப்ர் ஆகவே கணிக்கப்பட்டது. காரணம் அது அல்லாஹ்வின் சட்டத்தால் ஆளப்படவில்லை.

இஸ்லாமிய சமூகம் என்பது இறை சட்டத்தால் ஆளப்படும் சமூகமாகும். அதாவது இஸ்லாமியக் கொள்கைகளும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் அச்சமூகத்தை ஆளும் விதிகளாக இருக்கும். ஆனால் அவர்கள் எல்லோரும் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டை ஏற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜாஹிலியத் சமூகம் மனித சட்டத்தால் ஆளப்படும் சமூகமாகும். அதாவது இஸ்லாமிய கொள்கைகளோ கோட்பாடுகளோ நடைமுறைகளோ அதை ஆளமாட்டாது.(1)

முஸ்லிம் சிறுபான்மை

தாருல் இஸ்லாத்தில் வாழாமல் தாருல் குப்ரில் வாழும் முஸ்லிம்களையே “முஸ்லிம் சிறுபான்மை’ (அல் அகல்யதுல் முஸ்லிமா) என்ற சொல் குறிக்கின்றது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை என்பது முக்கியமல்ல. எந்தச் சட்டங்களால் ஆளப்படுகின்றது என்பதே முக்கியமாகும்.

வரலாற்றுக் காரணங்களால் அல்லது தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையில் இஸ்லாத்தால் ஆளப்பட்ட ஒரு நாட்டை ஒருவர் தனது தாய்நாடாகக் கொண்டுவிடலாம். அல்லது தொழில் பார்க்கவோ உயர் படிப்புக்கோ சென்று தங்கிவாழ்வதாக அமையலாம். இன்று உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் முஸ்லிம் சிறுபான்மை நான்கில் ஒரு பங்கையும் விடவும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் மட்டும் முஸ்லிம் சிறுபான்மையின் சனத்தொகை அறுபது மில்லியனாக உயர்ந்துள்ளது. இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனையே தெரிவிக்கின்றது.

சனத்தொகை அடிப்படையில், உலக முஸ்லிம்களில் அவர்களும் ஓர் அங்கம் என்று சொல்லலாம். இந்தியாவில் மட்டும் இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்திலும் பொதுவாக இஸ்லாமிய வரலாற்றிலும் இந்திய முஸ்லிம்களுக்கென்று தனியான வரலாறும் நாகரிகப் பண்பாடும் இருந்துள்ளது.

கிழக்கு மேற்கு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் இலங்கை கேந்திர மையமாக அமைந்திருந்தது. மேலும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிடையிலான வர்த்தகத்தின் இடையீட்டாளர்களாக அரேபியர்கள் மாறியிருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இஸ்லாம் தோன்றி முஸ்லிம்களின் ஆட்சிப் பரப்பு விரிவடைந்ததுடன் அரபு வர்த்தக நடவடிக்கைகள் புதியதோர் உந்துதலைப் பெற்றன. இந்து சமுத்திரப் பிரதேசங்களில் இடம்பெற்ற அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளின் காரணமாக தென்மேற்கு இந்திய இலங்கைக் கரையோரங்களில் அரபு முஸ்லிம் வர்த்தகர்களின் குடியேற்றங்கள் தோன்றின. நீண்டகாலத் தங்கியிருப்பின் காரணமாக உள்ளுர்க் குடும்பங்களுடன் திருமண உறவுகளும் ஏற்பட்டன.(2)

ஆசியாவில் ஆரம்ப கால முஸ்லீம் சமூகங்களில் சில இலங்கையிலேயே தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. தீவுக் கடற்பிரதேசங்களில் இவர்களது வியாபார நடவடிக்கைகள் பெருமளவு இடம்பெற்றுள்ளன. அவ்வாறே தென்கிழக்காசியாவில் அவர்களின் நடவடிக்கையின் மையமாக இலங்கையே திகழ்ந்திருக்க வேண்டும். இந்தக் குடியிருப்புக்கள் முதன் முதலாக ஏழாம் நூற்றாண்டில் இலங்கையிலும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் நிறுவப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.(3)

எனவே இலங்கை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையவர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையை இந்நாட்டு அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் தொல்பொருளியலாளர்களும் அறிவார்ந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் பண்புகளில் ஒன்று அது பிரசார சமூகமாக இயங்குவது. இறைத்தூதருக்குப் பின் அவரது தூதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பொறுப்பும் முஸ்லிம் சமூகத்தையே சாரும். இது முஸ்லிம் சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட பர்ளு கிபாயாவாகும்.

அல்ஜீரிய இஸ்லாமிய இயக்கத் தலைவர் மஹ்பூல் நஹ்நாஹ் முஸ்லிம் சிறுபான்மை பற்றிக் கூறும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

“முஸ்லிம்கள் கடந்தகால பூகோள வரலாற்று எல்லைகளுக்குள்ளே அடைபட்டு வாழ வேண்டுமென்று நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரு நிரந்தரத் தூதின் சொந்தக் காரர்கள். எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லவும் ஏனைய மனிதர்களின் அறிவுக் கண்களை திறந்துவிடவும் அல்லாஹ் அத்தூதை அவர்களுக்கு வழங்கியுள்ளான்.’’(4)

அந்நியப் பெரும்பான்மையின் கீழ் வாழும்போது தனது தனித்துவ அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதே முஸ்லிம் சிறுபான்மை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சினையாகும். பெரும்பான்மை அந்நியருக்கு முன்னால் முஸ்லிம் சிறுபான்மை தனது தனித்துவ சிந்தனையில் நிலைத்தல் என்பது ஒரு ஜீவமரணப் போராட்டமாகும். அழிவு இரண்டுவகை. ஒன்று, வெறும் உடல் மாத்திரம் அழிவது. மற்றது, உடல் அப்படியே இருக்க அதன் கொள்கையும் ஆன்மாவும் அழிவது. இதை அல்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கின்றது.

“கொள்கையை விட்டுத் திருப்புவது கொலைசெய்வதை விட மிகவும் கடுமையானது.’’ உடல் அழிவதோடு அத்தனையும் அழிந்துவிடுகின்றது. ஆனால் கொள்கையால் அழிந்து போன மனிதன் ஒரு நடைப் பிணமாக மாறிவிடுகின்றான். பெரும்பான்மையின் சிந்தனைகளும் கலாசாரமும் முஸ்லிம் சிறுபான்மையை நோக்கிப் படையெடுக்கும் போது அதனுள்ளே கரைந்து போகாமல் அது தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை தனக்கென்று இஸ்லாமிய வாழ்வுக்கான சூழல் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகின்றது.

“அந்நிய சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. பெரும்பான்மையின் கலாசார சிந்தனைத் தாக்குதல்களின் செல்வாக்கு அதிகரிக்கும் போது பிரச்சினை இன்னும் பாரதூரமாகின்றது. அவ்வாறு சூழ்நிலையின் கைதிகளாக வாழ்வதற்கு இஸ்லாம் தெளிவாக அனுமதிக்கவில்லை. எனவே தாருல் குப்ரிலிருந்து தாருல் இஸ்லாத்தை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்வதே ஒரே வழி.’’ என்று சிலர் முடிவெடுக்கின்றனர்.

தற்போதைய நிலையில் இஸ்லாமியப் பூமியை நோக்கி ஹிஜ்ரத் செல்வது நடப்பியல்பானதாக இல்லை. அதே நேரம் இஸ்லாமியப் பூமி என்று எந்த நாட்டை அடையாளம் காண்பது என்பது மற்றொரு சிக்கலாகும். இந்நிலையில் எமது பகுதிகளிலேயே நாம் வாழ்வது யாதார்த்தமாகிவிட்டது. ஆகவே எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தைப் பின்பற்றுவதனைத் தவிர வேறு எந்த ஏற்கத்தக்க கருத்துக்கள் இல்லை.

இஸ்லாமியப் பூமியில் வாழும் முஸ்லிம் அல்லாதோருக்கு தனியான சட்டங்களும் விதிமுறைகளும் காணப்படுவது போல் முஸ்லிம் சிறுபான்மை குறித்து அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ நேரடியான சட்டங்கள் கூறப்படவில்லை. முன்னைய சமகால சட்ட அறிஞர்கள் யாரும் இப்பகுதியைத் தனியாக ஆய்வு செய்யவுமில்லை. இந்நிலையில் முஸ்லிம் பெரும்பான்மைக்கென்று தயாரிக்கப்பட்ட சட்ட சிந்தனை ஒழுங்குகளை முஸ்லிம் சிறுபான்மையும் அப்படியே பின்பற்றுவது சாத்தியமாகுமா? அதிலொன்றை மாத்திரம் பின்பற்றுவது எந்தளவு சாத்தியம்? அதில் மாற்றம் கொண்டு வருவதை இஸ்லாமிய ரீதியில் அனுமதிக்க முடியுமா? எனப் பல முக்கிய வினாக்கள் இயல்பாகவே தொடுக்கப்படுகின்றன. இது பற்றி ஆழ்ந்த ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மொத்தத்தில் இஸ்லாம் என்ற கொள்கையை முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் எப்படி நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்பதை ஆராய்வதே “பிக்ஹுல் அகல்லியா’ என்பதில் மையப்படுத்தப்படுகின்றது. (Idrees (Plus*)) (தொடரும்)


Plus*; The Holy Quran says; ....மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்.’’ (4:28)

Home                Sri Lanka Think Tank-UK(Main Link)