Pages

Saturday 4 May 2013

ஆசாத் சாலியை விடுவிக்க இல்லையேல் போராட்டம் - விக்கிரமபாகு


1/


































2/

ஆசாத் சாலியை விடுவிக்க 24 மணித்தியால அவகாசம், இல்லையேல் போராட்டம் - விக்கிரமபாகு கருணாரத்தினா

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்ற ஆஸாத் சாலியை விடுவிக்கும் போரா ட்டத்திற்கு ஆதரவான பேரணியில் மாநகல சபை உறுப்பினர் விக்கிரமபாகு கருணாரட்னா ஆற்றிய உரை,

மஹிந்த அரசின் அடாவடித்தன்ஙகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.ஆசாத் சாலி எந்த குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பள்ள பள்ளிவாசல் மீது தாக்கப்பட்டது, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன, எதிர் கட்சி அரசியல் வாதிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.இதுதான் இந்த அரசாங்கத்தின் சாதனைகளாகும்.வடக்கில் தமிழ்,,முஸ்லிம் மக்களது காணிகளை பாதுகாப்பு நலன் கருதி பெறுவதாக கூறி அவற்றை அரசாங்கம் அபகரிக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளது.

இவைகள் கம்பணி்க் காரர்களுக்கு வெகு விரைவில் இந்த அரசாங்கம் வழங்கும் என்று கூறிய அவர், ஆசாத் சாலியினை இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் விடுதலை செய்யவிட்டால்,எமது போராட்டம் தொடரும் என்றும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார் (Via FB)
 
Appendix;
 
 Home 

No comments:

Post a Comment